உங்களை விரைவில் சந்திப்பேன் என நம்புகிறேன்: மோடிக்கு சுந்தர் 'கூகுள்' பிச்சை ட்வீட்
நியூயார்க்: பிரதமர் நரேந்திர மோடியை விரைவில் சந்திக்க விரும்புவதாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவன சிஇஓவாக தமிழரான சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டது குறித்த அறிவிப்பு வெளியானதும் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இது குறித்து மோடி ட்விட்டரில் கூறியிருந்ததாவது,
வாழ்த்துக்கள் சுந்தர் பிச்சை. கூகுளில் உங்களின் புதிய பதவிக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருந்தார்.
மோடியின் ட்வீட்டை பார்த்த சுந்தர் பிச்சை பதிலுக்கு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
@narendramodi @google Thanks for the warm wishes and hope to have the opportunity to meet you soon
— sundarpichai (@sundarpichai) August 11, 2015
@narendramodi @google வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களை விரைவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.