அமெரிக்காவில் டேக்வாண்டோவில் அசத்தும் தமிழ் சிறுவன்
இலினாய்ஸ்: அமெரிக்காவில் வசிக்கும் 8 வயது தமிழ் சிறுவன் சஞ்சித் கராத்தே, ஃபேஸ்பால் விளையாட்டு, அறிவியல் என பலதுறைகளில் ஆர்வம் மிகுந்தவராக உள்ளார்.
அமெரிக்காவின் இலினாய்ஸ் மாநிலத்தில் உள்ள பஃபலோ க்ரூவ் பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் படித்து வருபவர் இந்தியரான சஞ்சித் ஸ்ரீனிவாசன்(8). இந்த ஆண்டு நடந்த தேசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டு பலகை உடைக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார் சஞ்சித்.
இது குறித்து சஞ்சித்தின் தாய் சுபத்ரா கூறியதாவது,
சஞ்சித் 5 வயதில் இருந்தே டேக்வாண்டோ, பேஸ்பால் கற்று வருகிறார். இந்த இரண்டு பிரிவுகளிலும் அவர் ஏற்கனவே பல பரிசுகள் வாங்கியுள்ளார். சஞ்சித் ஒரு டிஏஏன் பேக் பெல்ட் பெற்றவர். இந்த ஆண்டு தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெண்கலம் வென்றார்.
சஞ்சித் 3 நிமிடங்களில் 30 பலகைகளை உடைத்து வெள்ளிப் பதக்கம் வென்றார். என் மகனுக்கு விஞ்ஞானி ஆகும் ஆசை உள்ளது. அவர் கனவை நிறைவேற்ற நாங்கள் உதவி செய்வோம் என்றார்.