பிஎம்டபிள்யூவில் “கசமுசா” - கள்ளக்காதலி பலி... கைதான இந்தியருக்கு 7 ஆண்டுகள் சிறை
லண்டன்: லண்டனில் ஓடும் காரில் செக்ஸ் வைத்துக் கொண்டு, அதனால் தனது கள்ளக்காதலி பரிதாபமாக இறந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர் மினேஷ் பிரபாத். இவருக்கும், இங்கிலாந்தினைச் சேர்ந்த 2 குழந்தையின் தாயான லிசா வால்டிங் என்ற 28 வயது பெண்ணுக்கும் இடையே கள்ளதொடர்பு இருந்து வந்தது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் சுசக்ஸ் என்ற இடத்தில் இருவரும் காரில் சென்றுகொண்டிருந்தனர். காரை மினேஷ்பிரபாத் ஓட்டி சென்றார். காரில் இருந்தபடியே இருவரும் "பலான" நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கார் விபத்துக்குள்ளாகி லிசா காரில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி லிசா உயிரிழந்தார். இது தொடர்பாக மினேஷ்பிரபாத் மீது வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்கள்.