For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சவுதியில் இந்தியன் சோஷியல் ஃபோரம் புதிய நிர்வாகிகள் தேர்வு!

By Siva
Google Oneindia Tamil News

சவுதி: சவூதி அரேபியா முழுவதும் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் ஜனநாயக ரீதியில் ஓட்டெடுப்பின் மூலம் நடைபெற்றது.

இத்தேர்தலில் வசீம் சித்திக்(கர்நாடகா) கிழக்கு மாகாண தேசிய தலைவராகவும், மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி (தமிழ்நாடு) தேசிய துணைத் தலைவராகவும், அப்துல்லாஹ் அலி(கேரளா) பொதுச் செயலாளராகவும், நாசர்(கேரளா) செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கிழக்கு மாகாண தமிழ் பிரிவின் மாநில தலைவராக அபுபக்கர்(காயல்பட்டினம்), துணைத் தலைவராக இக்பால் மௌலவி, பொதுச் செயலாளராக மக்தூம் நைனா(காயல்பட்டினம்), செயலாளராக சுல்தான்(காயல்பட்டினம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில நிர்வாக குழு உறுப்பினர்களாக இல்யாஸ், சைபுல்லாஹ்(கடையநல்லூர்), ஹபீப், குதுபுதீன்(நரிப்பையூர்), அஸ்கர்(மல்லிப்பட்டிணம்), ரமீஸ்தீன்(கீழக்கரை), அலி ஹுசைன், சமீமுல்லாஹ், ஆசிக், அபுபக்கர், ஜின்னா, நாசர், ரியாஸ் அகமது(அதிராம்பட்டிணம்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில செய்தி தொடர்பாளராக கீழை ஜஹாங்கீர் அரூஸி தேர்வு செய்யப்பட்டார். இவர்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவியில் இருப்பார்கள்.

English summary
Indian Social Forum has selected its members via voting in Saudi Arabia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X