டாய்லட்டில் தாங்க முடியாத நாற்றம்... காரணமான கணவரின் முகத்தை கத்தியால் கிழித்த மனைவி!
டோக்கியோ: ஜப்பானில் மலம் கழித்த கணவரால் கழிவறையில் ஏற்பட்ட துர்நாற்றத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத மனைவி, ஆத்திரத்தில் கணவரது முகத்தை கத்தியால் கிழித்த சம்பவம் நடந்துள்ளது.
டோக்கியோவில் வசித்து வருபவர் எமி மாமியா (29). சம்பவத்தன்று இவரது கணவர் கழிவறைக்குச் சென்று வந்த பின், அதனை நன்றாக தூய்மைப் படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. தனது 3 வயது மகனை கழிவறைக்கு அழைத்துச் சென்ற மாமியா, துர்நாற்றம் வீசியதால் ஆத்திரமடைந்தார்.
கழிவறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ள கணவர் மீது மாமியாவிற்கு கோபம் ஏற்பட்டது. இதனால், சமையலறைக்குச் சென்று கத்தியை எடுத்து வந்த மாமியா, கணவரின் முகத்தில் காயமேற்படுத்தினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாமியாவைக் கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப் பட்டது.
போலீசாரிடம் மாமியா அளித்த வாக்குமூலத்தில், ‘கழிவறையை சுத்தமாக வைக்காததுடன், கையை கூட சரியாக கழுவாமல் குழந்தையை தூக்கியதால் கணவரின் முகத்தை கத்தியால் கிழித்ததாக' தெரிவித்துள்ளார்.