For Daily Alerts
Just In
துபாய் வாழ் இந்திய சிறுமிக்கு சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருது
சர்வதேச குழந்தைகள் அமைதிக்கான விருது துபாய் வாழ் இந்திய சிறுமிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஹேக்: துபாய் வாழ் இந்திய சிறுமி கேஹாசனுக்கு சர்வேதச குழந்தைக்களுக்கான அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் 16-வது சர்வதேச குழந்தைகளுக்கான அமைதி விருது வழங்கும் விழா நடந்தது. இவ்விருது வழங்கும் விழாவில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட துபாய் வாழ் சிறுமி கேஹாசன் பாசுவுக்கு அமைதிக்கான விருது வழங்கப்பட்டது. கடந்த 2006ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முகமது யூனஸ், கேஹாசனுக்கு விருதை வழங்கி கவுரவித்தார்.
16 வயதான கேஹாசன் பாசு, தனது 8 வயதிலேயே சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரசாரத்தை தொடங்கியுள்ளார். துபாயில் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் விழிப்புணர்வு பிரசாரத்தையும் மேற்கொண்டு வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் பல சுற்றுச் சூழல் திட்டங்களையும் வெற்றிகரமாக செய்துள்ளார் கேஹாசன்.
Comments
English summary
Indian teenage environmental activist Kehkashan Basu receives the International Children's Peace Priz from Hagu
Story first published: Saturday, December 3, 2016, 1:16 [IST]