For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குவைத்தில் சிக்கித் தவித்த தமிழரை மீட்ட இந்தியன் சோஷியல் ஃபோரம்

By Siva
Google Oneindia Tamil News

குவைத்: குவைத்தில் வீட்டு வேலைக்கு வந்து கொடுமைக்கு ஆளான தஞ்சையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் உதவியால் மீட்கப்பட்டு தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். அவர் வீட்டு வேலை செய்ய குவைத்திற்கு சென்றார். அங்கு அவரை பணியமர்த்திய குவைத் நாட்டவர் அவரை கொடுமைபடுத்தியுள்ளார். குவைதியின் கொடுமைகளுக்கு ஆளான அவரை மீட்க குவைத்தில் உள்ள இந்தியன் சோஷியல் ஃபோரம் தொடர் முயற்சி செய்தது.

KIFF helps saves a tamil from the clutches of tormentor

மேலும் அவருக்கு ஃபோரம் ஆலோசனையும், உதவியும் செய்தது. இந்தியன் சோஷியல் ஃபோரம் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் அவரை மீட்டு கடந்த 25ம் தேதி எதிஹாட் விமானம் மூலம் தமிழகத்திற்கு அனுப்பி வைத்தது.

சொந்த ஊரை அடைந்த பிறகு ராஜேஷ் தன்னை காப்பாற்றிய இந்தியன் சோஷியல் ஃபோரத்தை தொடர்பு கொண்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

English summary
KIFF has saved a Tanjore based man Rajesh from the clutches of his tormentor in Kuwait.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X