For Daily Alerts
Just In
துபாயில் நடந்த தொழிலாளர்களுக்கான ஓட்டப்பந்தயம்
துபாய்: துபாய் சோனாப்பூர் பகுதியில் தொழிலாளர்களுக்கான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
தொழிலாளர்களுக்கான ஓட்டப்பந்தயம் இரண்டாம் ஆண்டாக நடத்தப்பட்டது. 3 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர் என இரண்டு பிரிவுகளாக இந்த ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
போட்டியில் சுமார் 700 பேர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது. இந்த ஓட்டப்பந்தயத்தில் தொழிலாளர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். பார்வையாளர்கள் வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
போட்டியில் பங்கேற்றவர்களுக்கு இலவசமாக நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளும் செய்யப்பட்டது. இந்த போட்டிக்கான ஏற்கான ஏற்பாடுகளை டீம் ஸ்போர்ட்ஸ் நிறுவன நிர்வாகி மெகருன்னிசா, ரியோ ஒலிம்பிக் போட்டியில் தன்னார்வலராக பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த அகமது சுலைமான் ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர்.
Comments
English summary
Running race for labourers titled 'Labour Run 2016' was held in Dubai for the second year. Nearly 700 people participated in the race.
Story first published: Tuesday, October 25, 2016, 17:44 [IST]