அடக் கருமமே... இந்த இங்கிலாந்து தாத்தா பிணத்தைக் கூட விட்டு வைக்கலையாம்!
லண்டன்: குழந்தைகளிடம் பாலியல் உறவு கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மறைந்த டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர், பிணவறையில் இருந்த சடலங்களுடனும் உடலுறவில் ஈடுபட்ட அதிர்ச்சித் தகவல் தற்போது தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த உலக பிரசித்தி பெற்ற தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் ஜிம்மி சேவில். இவர் தனியார் வானொலி ஒன்றிலும் நிகழ்ச்சி வர்ணனையாளராக பணி புரிந்து வந்தார்.
இவரது 83ம் வயதில் குழந்தைகளுடன் பாலியல் உறவு கொண்டதாக இவர் மீது குற்றம் சாட்டப் பட்டது.
நோயாளிகள்....
போலீஸ் விசாரணையில், ஜிம்மி நாடு முழுவதும் உள்ள 28 தேசிய சுகாதார சேவை மைய ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 5 வயது குழந்தைகள் முதல் 75 வயது வரையிலான முதியவர்களுடன் செக்ஸ் உறவு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
40 ஆண்டுகளாக...
மேலும், கடந்த 40 ஆண்டுகளாக இதை செய்து வந்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார் ஜிம்மி. ஆனபோதும் விசாரணை நடந்து கொண்டிருந்த போதே, தனது 84வது வயதில் கடந்த 2011ம் ஆண்டு ஜிம்மி மரணமடைந்தார்.
சடலங்களுடன்...
இந்நிலையில், மருத்துவமனை பிணவறையில் பரிசோதனைக்காக வைக்கப் பட்டிருந்த சடலங்களுடனும் ஜிம்மி உடலுறவு கொண்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அதிர்ச்சி...
ஜிம்மி வழக்கை விசாரித்த அதிகாரிகள் தற்போது இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர். இச்செய்தியை கேட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்காக சுகாதார துறையின் செயலாளர் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.