இங்கிலாந்து நாடாளுமன்ற தீவிரவாத தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 4-ஆக உயர்வு
லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்றம் அருகே நேற்று நடைபெற்ற தீவிரவாத துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. 20 பேர் காயமடைந்தனர்.
இங்கிலாந்தில் நாடாளுமன்ற, கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற வாளகம் , வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் அருகே அந்த நாட்டு நேரப்படி நேற்று பகல் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பலியானதாகவும் 20 பேர் காயமடைந்ததாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்காட்லாந்து யார்டு போலீசார் விசாரணை நடத்தினர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.
இந்த தாக்குதல் ஏற்கனவே பெர்லின், நைஸ் நகரங்களில் நடைபெற்ற தாக்குதல்களுடன் ஒத்துப்போவதால் இது தீவிரவாத தாக்குதல்தான் என்ற சந்தேகம் உறுதிப்பட்டுள்ளது.