ஆண் குழந்தையை நாயைப் போன்று நடத்தி புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட தாய்
மனிலா: பிலிப்பைன்ஸில் தாய் ஒருவர் தனது மகனின் கழுத்தில் கயிறை கட்டி அவரை நாய் போன்று நடத்தி அதை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவரின் மனைவி தனது ஆண் குழந்தையை நிர்வாணமாக்கி அவரின் கழுத்தில் கயிறை கட்டி ஒரு கோப்பையில் நாய் உணவை வைத்து தான் பெற்ற குழந்தையை நாய் போன்று நடத்தியுள்ளார். அதை அவர் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.
இதை பார்த்த பலரும் அவரை திட்டித் தீர்த்தனர். இந்நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்த அயர்லாந்தைச் சேர்ந்த சமூக சேவகியான லர்லீன்(46) என்பவர் இது குறித்து அமெரிக்காவில் உள்ள சட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் பிலிப்பைன்ஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். பிலிப்பைன்ஸ் போலீசார் அந்த பெண்ணை கண்டுபிடித்து தங்கள் காவலில் எடுத்தனர். அவரின் குழந்தையை குழந்தைகள் காப்பகத்தில் விட்டுள்ளனர்.
இது குறித்து லர்லீன் கூறுகையில்,
நான் ஃபேஸ்புக்கை பயன்படுத்துகையில் குழந்தையை நாய் போன்று நடத்திய புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அதை பார்த்த உடன் என் ரத்தம் கொதித்தது. இது போன்ற கொடுமைகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது என்றார்.