'மிஸ்டர் அக்லி' போட்டி: வந்தார், ஓட்டைப் பல்லை காண்பித்து சிரித்தார், வென்றார்
ஹராரே: ஜிம்பாப்வேயில் நடந்த மிஸ்டர் அகோரம் போட்டியில் தனது கோரப்பற்களை காண்பித்து சிரித்து பயமுறுத்திய மைசன் செரே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
உலக அழகி, பிரபஞ்ச அழகி, குண்டு அழகி, ஆணழகன் என்று பல போட்டிகளை பார்த்திருப்பீர்கள். ஜிம்பாப்வேயில் ஆண்டுதோறும் மிஸ்டர் அக்லி(அகோரம்) என்ற பெயரில் நடக்கும் போட்டியை பார்த்துள்ளீர்களா?
அந்த போட்டியில் பார்க்க அழகில்லாமல் பயங்கரமாக இருக்கும் ஆண்கள் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான போட்டியில் பலர் கலந்து கொண்டு ஆடிப்பாடி தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
அதில் மைசன் செரே என்பவர் தனது ஓட்டைப்பல்லை காட்டி சிரித்தார். அவ்வளவு தான் அவர் தான் மிஸ்டர் அகோரம் என்று பட்டம் சூட்டிவிட்டனர். அவருக்கு பரிசாக ரூ.33 ஆயிரம் அளிக்கப்பட்டது.
செரே டிவியில் நடித்து சம்பாதிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் செரே சிரித்தால் மட்டுமே பயங்கரமாக இருப்பதால் அவருக்கு மிஸ்டர் அகோரம் பட்டம் அளித்தது சரியில்லை என போட்டியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.