மஸ்கட் தமிழ்ச்சங்க தேர்தல்: புதிய நிர்வாகிகள் தேர்வு
மஸ்கட்: மஸ்கட் தமிழ்ச்சங்க நிர்வாகக் குழு தேர்தலில் நவரத்தினம் மற்றும் விடியல் என இரு அணிகள் போட்டியிட்டன. நவரத்தினம் என்ற அணிக்கு சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜானகிராமன் அவர்களும், விடியல் என்ற அணிக்கு சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் பஷீர் அவர்களும் ஆதரவு திரட்டினர்.
இந்நிலையில் சங்கத்தின் நிர்வாகிகளாக 8 பேர் நவரத்தினம் அணியில் இருந்தும், ஒருவர் (1) விடியல் அணியில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சங்கத் தலைவராக அபுஹசன் அவர்களும், துணை தலைவராக சீனிவாசன் அவர்களும், பொருளாளராக திருமதி. விஜயலட்சுமி அவர்களும் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் கர்ணன், ஜவஹர், மணிகண்டன், திருமதி. சுஜீதா, திருமதி.விசாலம் மற்றும் பஷீர் அவர்களும் தங்களது சமுதாயப் பணியை ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிர்வாகிகள் ஏப்ரல் 2015 தொடங்கி வரும் ஏப்ரல் 2017 வரை சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வார்கள் என்பதையும், சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜானகிராமன் அவர்கள் சங்க நிர்வாகிகளுக்கு ஆலோசகராக இருப்பார் எனவும் மஸ்கட் தமிழ்ச் சங்கம் முடிவெடுத்திருக்கிறது.