ஒரே ஆண்டில் ஒன்பது ஏவுகணைகளை தொடுத்த வடகொரியா
குறுகிய தூர ஏவுகணையை வடகொரியா ஜப்பானிய கடலில் (சக்கலின் மற்றும் ஆசியப் பகுதிகளுக்கு இடையே ஒரு குறுகலான கடல்) செலுத்தியுள்ளது .
வட கொரியாவின் இந்த நடவடிக்கையின் மூலம் அது பிராந்திய அழுத்தங்களை அதிகரித்துள்ளது மேலும் அதன் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்தும் சர்வதேச முயற்சிகளையும் மீறியுள்ளது.
இந்த ஆண்டில் தனது ஒன்பதாவது ஏவுகணையை செலுத்திய வடகொரியா உடனடியாக கண்டனங்களை எதிர்கொண்டுள்ளது.
சமீபத்தில் நடந்த ஜி7 மாநாட்டில் வடகொரியாவை எதிர்கொள்ளும் விஷயத்திற்கு முன்னுரிமை தரவேண்டும் என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது என்று ஜப்பானிய பிரதமர் ஷின்சு அபே தெரிவித்தார்.
அமெரிக்கா உட்பட பிற நாடுகளுடன் சேர்ந்து, ஜப்பான் வடகொரியாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை முறியடிக்க குறிப்பிட்ட நடவடிக்கை எடுக்க வேலைசெய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள் :
மோதி அரசின் மூன்றாண்டு - எங்கே அந்த நல்ல நாட்கள்?
நல்ல காலம் யாருக்கு? மக்களுக்கு அல்ல!
மான்செஸ்டர் தற்கொலை தாக்குதல்தாரியின் சிசிடிவி படங்கள் வெளியீடு