For Daily Alerts
Just In
அப்துல் கலாம் இந்தியாவின் பெருமை, என்றும் நினைவு கூறப்படுவார்: பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: அப்துல் கலாம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர், அவர் என்றும் நினைவு கூறப்படுவார் என மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவிற்கு பாகிஸ்தான் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் 11வது குடியசுத் தலைவராக கடந்த 2002 -2007ம் ஆண்டுகளில் பதவி வகித்தவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். நேற்று ஷில்லாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அப்துல்கலாம், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
கலாமின் மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கலாமின் உடலுக்கு பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்த டெல்லியிலும், ராமேஸ்வரத்திலும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
இந்நிலையில், கலாமின் மறைவிற்கு பாகிஸ்தான் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. அதில், ‘அப்துல் கலாம் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர், என்றும் நினைவு கூறப்படுவார்' என தெரிவிக்கப் பட்டுள்ளது.
Comments
English summary
Pakistan condoled the death of former president APJ Abdul Kalam, saying he would be remembered for his meritorious services.
Story first published: Tuesday, July 28, 2015, 14:04 [IST]