For Daily Alerts
Just In
டெல்லியில் தங்களது தூதரக அதிகாரியை கைது செய்ததற்கு பாக். கண்டனம்! இரு நாட்டு உறவில் விரிசல்
இஸ்லாமாபாத்: இந்திய பாதுகாப்பு ரகசியங்களை உளவு பார்த்ததாக கூறி டெல்லியில் பாகிஸ்தான் தூதரக அதிகாரியை போலீசார் கைது செய்ததை பாகிஸ்தான் கண்டித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறுகையில், பாகிஸ்தான் தூதரக அதிகாரியை கைது செய்ததற்கும், அவரை தரக்குறைவாக நடத்தியதற்கும், கண்டனத்தை பதிவு செய்கிறோம். பாகிஸ்தான் தூதரக உறவை மழுங்கச் செய்யும் இந்திய முயற்சிதான் இது. எங்கள் அதிகாரி தவறு செய்ததற்கான எந்த ஆதாரமும் தரப்படவில்லை. இது ஒரு பொய் குற்றச்சாட்டு என்று தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தூதரக அதிகாரி மெகமூத் அக்தரை, நாளை மறுநாளுக்குள், நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
Pakistan on Thursday condemned the "detention and manhandling" of a mission staffer in Delhi who was then asked to leave India over alleged spying activities. The Ministry of Foreign Affairs here said the embassy staffer was detained on "false and unsubstantiated" charges of espionage and asked to leave India by Saturday.
Story first published: Thursday, October 27, 2016, 16:01 [IST]