இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்ற பிரான்ஸ் எழுத்தாளர் பாட்ரிக் மொதியானோ
2014ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த பரிசு பிரான்ஸை சேர்ந்த எழுத்தாளர் பாட்ரிக் மொதியானோவுக்கு கிடைத்துள்ளது. பாட்ரிக் கடந்த 1945ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி பாரிஸில் பிறந்தார். இரண்டாம் உலகப் போர் முடிந்த 2வது மாதத்தில் அவர் பிறந்தார். அவர் எழுதிய முதல் நாவலான லா பிளேஸ் டெல் எடியோல் 1968ம் ஆண்டு வெளியானது.
அவர் கென்ய எழுத்தாளர் நுகி வா தியோங்கோ, ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முரகாமி, பெலுருசியாவைச் சேர்ந்த பத்திரிக்காயளரும், எழுத்தாளருமான ஸ்வெட்லானா அலெக்சிவிச் மற்றும் சிரியாவைச் சேர்ந்த கவிஞர் அடோனிஸ் ஆகியோரை தோற்கடித்து நோபல் பரிசை வென்றுள்ளார்.
பாட்ரிக்கிற்கு பதக்கமும், ரூ.6 கோடியே 85 லட்சத்து 37 ஆயிரம் ரொக்கமும் கிடைக்கும். முன்னதாக கடந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை கனடாவை சேர்ந்த எழுத்தாளர் ஆலிஸ் மன்ரோ பெற்றார்.