”பெஷாவர் தாக்குதலுக்கு மூளையே இந்தியாதான்” – அமிலத்தை வாரித் தெளித்துள்ள முஷாரப்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நடைபெற்ற படுபயங்கர தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் உளவு அமைப்பும் ,ஆப்கானிஸ்தானும் தான் காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் தனது உளறல் பேச்சில் குற்றம்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் வார்சக் சாலையில் உள்ள ராணுவ பப்ளிக் பள்ளி ஒன்றில் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 132 குழந்தைகள் உள்பட 141 பேர் பலியாயினர்.
உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்திற்கு ஆப்கானில் செயல்படும் தலிபான் பயங்கரவாதி முல்லா பஸ்லுல்லா தான் காரணம் எனவும், தலிபான் கமாண்டர் உமர் நரேய் இதற்கு மூளையாக செயல்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. பஸ்லுல்லாவை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், இச்சம்பவத்திற்கு முக்கிய காரணம் இந்தியாதான்.இந்தியாவில் இருந்துதான் தாக்குதலில் ஈடுபட்ட தாலிபான் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளாது என்றெல்லாம் பேசியுள்ளார் பர்வேஸ் முஷாரப். அவருடைய இந்த உளறல்தனமான பேச்சினால் இந்தியாவில் பல தரப்பினர் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனர்.