பிரசல்ஸ் தாக்குதல் நடந்த அதே நாளில் இங்கிலாந்து நாடாளுமன்ற தாக்குதல்!
லண்டன்: கடந்த ஆண்டு மார்ச் 22ம்தேதி பெல்ஜியத்தின் தலைநகரான பிரசல்ஸ் நகரின் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தினர் தீவிரவாதிகள். இதில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Tell me, don't you love the new Europe? #Westminster #London #BrusselsRemembers pic.twitter.com/1rQeeAbRWE
— Voice of Europe (@V_of_Europe) March 22, 2017
இந்த நிலையில், சரியாக ஓராண்டு கழித்து அதே நாளான மார்ச் 22ம் தேதி இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் வெளியே தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்ற தாக்குதல் தீவிரவாத தாக்குதல்தான் என்று லண்டன் காவல்துறை அறிவித்துள்ளது. தேதி ஒத்துப்போவது இந்த சந்தேகத்தை உறுதி செய்துள்ளது.
இதனிடையே பிரசல்ஸ் நகரில் நடந்த தாக்குதல் மற்றும் இப்போதைய தாக்குதல் ஆகியவற்றை ஒப்பிட்டு வெளியான ஒரு போட்டோ உலகமெங்கிலும் வைரலாகியுள்ளது.