For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் சிறிசேனவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!!

By Mathi
Google Oneindia Tamil News

பாரீஸ்: பருவநிலை உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஹோலண்டே மற்றும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரத்தில் ஐ.நா.வின் சர்வதேச பருவநிலை உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது இதில் மொத்தம் 147 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இம்மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேசினார். பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, பொலிவிய அதிபர் ஈவோ மோரலெஸ் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார்.

இந்த மாநாட்டின் லாபி அறையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் கை குலுக்கிய பிரதமர் மோடி சிறிதுநேரம் இருவரும் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து உரையாடினர்.

English summary
Prime Minister Narendra Modi and his Pakistani counterpart Nawaz Sharif met in Paris on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X