ஆஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் அகதி மர்ம மரணம்
கான்பெரா: ஆஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் அகதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பகுதியைச் சேர்ந்தவர் திருவருள்குமார் (36). இவர் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தின் புறநகர் பகுதியில் தங்கியிருந்து, தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்றில் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரி கடந்த 5 ஆண்டுகளாக வசித்து வந்த அவர், அங்கு நிரந்தரமாக வசிக்க முயற்சித்து வந்திருக்கிறார். இந்நிலையில் அங்கு மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அவரது மனைவியும், குழந்தைகளும் வசித்து வருகின்றனர்.
இலங்கை தமிழர்கள் பலர் ஆஸ்திரேலியாவிற்கு தொடர்ந்து புகலிடம் கோரி கடல்வழியாக செல்ல முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மர்மமான முறையில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.