For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்பி மோகத்தால் விபரீதம்- தொண்டைக் குழியில் குண்டு பாய்ந்து இளைஞர் பலி!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியுடன் செல்பி மூலம் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த 19 வயது அமெரிக்க வாலிபர் தொண்டையில் குண்டுபாய்ந்து இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு ஹூஸ்டன் நகரை சேர்ந்த டெலன் அலன்சோ ஸ்மித் என்ற அந்த வாலிபர் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Teenager dies after accidentally shooting himself

குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியினை பிடித்துக் கொண்டு செல்பி எடுக்க முனைந்த போது, தவறுதலாக துப்பாக்கியின் டிரிக்கரில் கை பட்டு குண்டு அந்த இளைஞரின் தொண்டைக் குழியை துளைத்தது. ரத்தம் பெருக்கெடுத்து அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார் அந்த இளைஞர்.

இதேபோல், சில மாதங்களுக்கு முன்னர் ரஷ்யாவை சேர்ந்த 21 வயது இளம்பெண் செல்பி மோகத்தில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு, மயிரிழையில் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

English summary
Deleon Alonso Smith, 19, died of a single gunshot wound to the throat after accidentally pulling the trigger while posing with his cousin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X