3 வயது இரட்டையர்களால் அவனில் வைக்கப்பட்ட 19 மாத பெண் குழந்தை பலி
ஹூஸ்டன்: அமெரிக்காவில் மூன்று வயது இரட்டையர்கள் தங்களின் 19 மாத தங்கையை மைக்ரோவ் அவனில் வைத்து வேக வைத்ததில் குழந்தை பரிதாபமாக பலியானது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகரைச் சேர்ந்தவர் ராக்கல் தாம்ப்சன்(25). அவர் கடந்த 16ம் தேதி வீட்டில் தனது 3 வயது இரட்டைக் குழந்தைகள், 19 மாத பெண் குழந்தை ஜெசிரா தாம்ப்சன் மற்றும் ஒரு 5 வயது குழந்தை ஆகியோரை தனியாக விட்டுவிட்டு வெளியே சென்றார்.
ராக்கல் தனது காதலருடன் பீட்சா, மருந்து வாங்க கடைக்கு சென்றார். வீட்டில் தனியாக இருந்த குழந்தைகளின் கவனத்தை மைக்ரோவேவ் அவன் ஈர்த்துள்ளது. இந்நிலையில் இரட்டையர்களில் ஒரு குழந்தை ஜெசிராவை மைக்ரோவேவ் அவனில் வைத்துள்ளது, மற்றொன்று சுவிட்சை ஆன் செய்தது.
இதில் குழந்தை ஜெசிரா உடல் கருகி பலியானது. ராக்கல் வீடு திரும்பியபோது குழந்தைகள் மூவரும் சமையல் அறையை காண்பித்து அழுதனர். ஓடிப் போய் பார்த்தபோது ஜெசிரா இறந்து கிடந்தது தெரிய வந்தது.
குழந்தைகளை ஒழுங்காக கவனிக்காத ராக்கல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராக்கல் வசிக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் தான் குழந்தைகளின் பாட்டியும் வசிக்கிறார். இருப்பினும் அவர் வெளியே செல்கையில் பாட்டியிடம் குழந்தைகளை பார்த்துக் கொள்ளுமாறு கூறவில்லை.