சவுதியில் ட்ரெய்லர் மோதி கேரளாவைச் சேர்ந்த 5 பேர் பலி..பணி முடித்து திரும்பிய போது நேர்ந்த பரிதாபம்.
ரியாத் : பணி முடித்து வீடு திரும்பிய போது ட்ரெய்லர் மோதியதில் கேரளாவைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். உடல்களை கேரளா கொண்டுவர இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாண தலைநகர் தமாம். இங்குள்ள நிறுவனம் ஒன்றில், கேரளாவைச் சேர்ந்த, சந்தோஷ்குமார், இக்பால், துளசி, ரவீந்திர நாயம், சிவகுமார் ஆகியோர் பணி புரிந்து வந்தனர்.
நேற்று முன்தினம், அவர்கள் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, சல்வா என்ற இடத்தில், வேகமாக வந்த, 'டிரெய்லர்' ஒன்று அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில், சம்பவ இடத்திலேயே ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 'ஐந்து பேர் இறந்தது குறித்து, கேரளாவில் உள்ள அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலங்களை இந்தியாவிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, இந்திய துாதரக அதிகாரி
மனோஜ் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம், மெக்காவில் இருந்து திரும்பும் போது, ரியாத் அருகே கார் மீது லாரி மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு இந்தியர்கள் உயிரிழந்தனர்.