துனிசியாவின் "தேசிய பேச்சுவார்த்தை குழு"வுக்கு அமைதிக்கான நோபல் பரிசு
ஆஸ்லோ: துனிசியாவில் அரபு வசந்தம் எனும் புரட்சிக்குப் பின்னர் ஜனநாயகத்தை நிலைநாட்டியதற்காக "தேசிய பேச்சுவார்த்தை குழுவுக்கு (National Dialogue Quartet) அமைதிக்கான 2015 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோமில் உள்ள நோபல் பரிசு குழுவால் அளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு இயற்பியல், வேதியியல் மற்றும் மருத்துவம் மற்றும் இலக்கிய துறைகளில் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோர் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது.
துனிசியா நாட்டின் தேசிய பேச்சுவார்த்தைக் குழுவுக்கு 2015ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING NEWS The 2015 Peace #NobelPrize is awarded to the National Dialogue Quartet in Tunisia pic.twitter.com/3O9jzwBK08
— The Nobel Prize (@NobelPrize) October 9, 2015
2010-11 ஆம் ஆண்டுகளில் துனிசியாவில்தான் அரபு வசந்தம் என்கிற மல்லிகைப் புரட்சி தொடங்கியது. இந்த புரட்சிக்குப் பின்னர் துனிசியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு பாடுபட்டதற்காக இந்த அமைப்புக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
துனிசியாவின் இந்த தேசிய பேச்சுவார்த்தைக் குழுவில் மொத்தம் 4 அமைப்புகள் இடம்பெற்றுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.