For Daily Alerts
Just In
பெஷாவரை அடுத்த கொலாச்சியில் மகளிர் கல்லூரி அருகே குண்டுகள் வெடிப்பு!
பெஷாவர்: பள்ளிக் குழந்தைகள் உட்பட 141 பேர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள் பெஷாவர் அருகே கொலாச்சி என்ற இடத்தில் மகளிர் கல்லூரி அருகே 2 குண்டுகள் வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பெஷாவரில் நேற்று தலிபான் தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து வெறியாட்டம் போட்டதில் 132 பள்ளிக் குழந்தைகள் உட்பட 141 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கைபர் மாகாணத்தில் தலிபான் நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் கடுமையாக தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் பெஷாவர் அருகே கைபர் மாகாணத்தின் கொலாச்சி என்ற இடத்தில் மகளிர் கல்லூரி அருகே 2 வெடிகுண்டுகள் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியான. இந்த சம்பவம் குறித்து கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Comments
English summary
Two explosions heard in Girls Degree College in Pakistan's Kulachi, near Peshawar.
Story first published: Wednesday, December 17, 2014, 17:43 [IST]