சுவீடன் நாட்டுக்கான தூதராக அமெரிக்காவாழ் இந்தியர் அஜிதா ராஜியை நியமித்தார் ஒபாமா!
வாஷிங்டன்: சுவீடன் நாட்டுக்கான அமெரிக்காவின் தூதராக அந்நாடு வாழ் இந்தியரான அஜிதா ராஜியை அதிபர் ஒபாமா நியமித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தனது தேர்தல் பிரசாரத்தின் போது நிதிதிரட்டல் பணியில் முக்கியபங்காற்றிய அமெரிக்கவாழ் இந்தியரான அஜிதா ராஜியை, சுவீடன் நாட்டுக்கான அமெரிக்க தூதராக நியமனம் செய்துள்ளார்.
முன்னாள் முதலீட்டு வங்கியாளரான, கலிபோர்னியாவை தலைமையகமாக கொண்ட ராஜி, 2012-ல் ஒபாமாவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார நிதிதிரட்டலில் துணைத் தலைவராக பதவி வகித்தவர். ஒபாமாவின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்துக்கு 500,000 அமெரிக்க டாலரை ராஜி அதிகரித்தார்.
முக்கிய நிர்வாகப் பதவிகள் குறித்தான அறிவிப்பை வெள்ளை மாளிகை வெளியிட்டபோது, அஜிதா ராஜியின் பெயரும் இடம்பெற்று இருந்தது. அஜிதா ராஜி, சுவீடன் நாட்டிற்கான அமெரிக்க தூதராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.