3 ஆண்டுகளாக காத்திருந்து காத்திருந்து... தற்போது கேமராவில் பிடிக்கப்பட்ட அரிய வகை வெள்ளைநிற கடமான்
சுவீடன் நாட்டில் மிகவும் அரிய வகை இனமான வெள்ளை கடமான் ஒன்று அங்குள்ள ஏரியில் தண்ணீர் குடிக்கும் காட்சிகள் கேமராவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாக்ஹோம்: சுவீடன் நாட்டில் மட்டுமே காணப்படும் அரிய வகை இனமான வெள்ளை சுடமான் ஒன்று ஏரியில் தண்ணீர் குடிக்கும் போது படம்பிடிக்கப்பட்டுள்ளது.
பணத்துக்காகவும், இறைச்சிக்காகவும் விலங்குகள் வேட்டையாடப்பட்டு வருகிறது. இதனால் ஒரு சில விலங்குகள் பரவலாக இருந்த நிலையில் தற்போது விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் மட்டுமே உள்ளன.
அந்த வகையில் அரிய மான் வகையான வெள்ளை கடமான் ஒருவரது கேமராவில் பிடிப்பட்டுள்ளது. சுவீடன் நாட்டில் உள்ள ஒரு ஏரியில் தண்ணீர் குடிக்கும் போது கேமராவில் பிடிப்பட்டது.
3 ஆண்டுகள் காத்திருப்பு
வெள்ளை கடமான் பொதுவாக சுவீடனில் மட்டுமே காணப்படுகிறது. அதுவும் மிகவும் அரிதாகவே கண்களில் தென்படும். இந்நிலையில் கடமானை எப்படியாயினும் கண்டே தீர வேண்டும் என்று அன்ஸ் நீல்சன் என்பவர் 3 ஆண்டுகளாக காத்திருந்தார்.
தினமும் பார்வை
அந்த ஏரியில் அந்த கடமான் தண்ணீர் குடிக்கும் என்பதை அறிந்த அன்ஸ் தினந்தோறும் அந்த ஏரிக்கு சென்று வருவார். இதேபோல் 3 ஆண்டுகள் கடந்த நிலையில் ஒருநாள் ஏரியில் அந்த மான் தண்ணீர் குடித்து கொண்டிருந்தது.
படம்பிடித்தார்
உடனே கையில் இருந்த கேமராவுடன் காத்திருந்தார். பின்னர் ஏரியின் மறுமுனைக்கு சென்ற அந்த மான் அங்கிருந்த இலை தழைகளை திண்றது. அதன்பின்னர் திரும்பி பார்த்து இவரது கேமராவுக்கு அந்த மான் போஸ் கொடுத்தது.
சமூக வலைதளங்கள்
வெள்ளை கடமானை வீடியோ எடுத்த பதிவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார். அதை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டுள்ளனர். இந்த மானின் வெள்ளை நிறம் அதன் மரபணு மாற்றத்தால் வந்ததே தவிர, அதன் நிறம் வெளுத்ததால் அல்ல என்று தகவல்கள் கூறுகின்றன.
|
100 மான்கள் மட்டுமே
இந்த வெள்ளை கடமானாது சுவீடனில் வெறும் 100 எண்ணிக்கையே உள்ளன. இதன் நிறத்தால் எளிதாக வேட்டைக்காரர்களிடம் சிக்கி மடிந்து விடுகின்றன. இந்த மான் வேட்டையர்களுக்கு தென்பட்டால் அன்று அவர்களுக்கு ஜாக்பாட் அடித்தது என்றே அர்த்தமாம்.