For Daily Alerts
Just In
நியூசிலாந்தில் நிலநடுக்கம் – ரிக்டரில் 5.8 ஆக பதிவு
ஆக்லாந்து: நியூசிலாந்தின் தெற்கு தீவில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. பல வீடுகளின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின.
இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.
அங்கு 5.8 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
தெற்கு தீவில் வனாகா என்ற நகரம் சுற்றுலா மையமாகும். இங்கு 6,500 மக்கள் வசிக்கின்றனர். இந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு தங்கியிருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
Comments
English summary
People fled into the street in Wanaka as a magnitude 5.8 earthquake shook the lower South Island.The 5.8 magnitude quake at 2.29pm was located 30km northwest of Wanaka. It was at a depth of 4km.
Story first published: Monday, May 4, 2015, 12:05 [IST]