For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஷெரீபுக்கு 'தில்' இல்லைனா மோடிக்கு நான் பதில் அளிப்பேன்: இம்ரான் கான் ஆவேசம்

By Siva
Google Oneindia Tamil News

லாகூர்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு தைரியம் இல்லை என்றால் இந்திய பிரதமர் மோடிக்கு நான் தக்க பதில் அளிப்பேன் என முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவம் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் ராணுவம் மறுத்து வருகிறது. ஆனால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபோ இந்தியா நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Will give befitting response to Modi that Sharif couldn’t muster: Imran Khan

இந்நிலையில் இது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவருமான இம்ரான் கான் லாகூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நவாஸ் ஷெரீபுக்கு தைரியம் இல்லை என்றால் இந்திய பிரதமர் மோடிக்கு நான் தக்க பதில் அளிப்பேன். முதலில் நான் ஷெரீபுக்கு தகவல் அனுப்ப வேண்டும். நாளை மோடிக்கும் சரியான பதில் அனுப்புவேன்.

மோடியை எப்படி கையாள வேண்டும் என ஷெரீபுக்கு சொல்லிக் கொடுப்பேன். இந்த நேரத்தில் பாகிஸ்தான் மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றார்.

English summary
Following Indian claims of "surgical strikes" at the terror launch pads in Pakistani Kashmir, Pakistan opposition party leader Imran Khan said he will show his Prime Minister Nawaz Sharif how to react to such "aggressions".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X