வெள்ளி பதக்கம்
28 வயதாகும் இந்திரஜித் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். 2014ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றவர் இவர்.
28 வயதாகும் இந்திரஜித் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். 2014ம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்றவர் இவர்.
சோதனை
தேசிய பயிற்சி முகாம்களில் பங்கேற்காமல், சொந்த பயிற்சியாளரை கொண்டு பயிற்சி எடுத்து வருபவர் இந்திரஜித். கடந்த 22ம் தேதி இவருக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஊக்க மருந்து
தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி சார்பில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், இந்திரஜித் உடலில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து கூறுகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
7 நாளில் டெஸ்ட்
இன்னொரு ரத்த பரிசோதனை நடத்த இந்திரஜித் விரும்பினால் 7 நாட்களுக்குள் அதை செய்ய வேண்டும் என்று ஊக்கமருந்து தடுப்பு ஏஜென்சி கெடுவிதித்துள்ளது. இரண்டாவது சோதனையிலும், இந்திரஜித் ஊக்கமருந்து உட்கொண்டிருப்பது உறுதியானால் அவருக்கு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி கிடைக்காது.
4 வருடம் அம்பேல்
மேலும், மாற்றப்பட்ட புதிய விதிமுறைகள்படி, 4 வருடங்களுக்கு அவரால் எந்தவிதமான போட்டிகளிலும் பங்கேற்கவும் முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த ஊக்கமருந்து பிரச்சினைகளால் வெலவெலத்து கிடக்கிறது, இந்திய ரியோ ஒலிம்பிக் போட்டியாளர்கள் கூடாரம்.