அரையிறுதியில் மோதல்
இதில் இந்தோனேசிய ஓபன் போட்டியில் மட்டும் சாம்பியன் பட்டம் வென்றார். சீனாவின் சென் லாங், கொரியாவின் லீ ஹுயுன் ஆகியோர் அரையிறுதியில் மோதினர். இவர்களில் சென் லாங் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சீன வீரர் சென் லாங்கை 22-20, 21-16 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வீழ்த்தினார்.
குரூப் 1 அதிகாரி பணி
விஜயவாடாவில் தும்மலபள்ளி கலாசேத்ராவில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். அப்போது ஸ்ரீகாந்துக்கு ரூ.50 லட்சம் பரிசுத் தொகையும், மாநிலத்தில் குரூப் 1 அதிகாரி பணியும் வழங்கப்பட்டது.
கோச்சுக்கு ரூ.15 லட்சம்
அவரது கோச் கோபிசந்துக்கு ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வருக்கு ஸ்ரீகாந்த் பாட்மிண்டன் ராக்கெட்டை பரிசளித்து இருவரும் விழா மேடையிலேயே விளையாடினர்.
விளையாட்டு பல்கலைக்கழகம்
வெளிநாட்டு கோச்களிடம் ஸ்ரீகாந்த் பயிற்சி பெற விரும்பினால் அதற்கு தேவையான நிதியுதவியை அரசு அளிக்கும் என்றும், அமராவதியில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும்.விசாகப்பட்டினம் மற்றும் திருப்பதியில் பாட்மிண்டன் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் முதல்வர் சந்திர பாபு நாயுடு தெரிவித்தார்.