நாட்டுக்கே பெருமை
டெஹ்ராடூனைச் சேர்ந்த பூமிகா ஷர்மா உலக பால் பில்டருக்கான சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவையே பெருமைபட செய்துள்ளார். பூமிகா ஷர்மாவின் தாய் ஹன்சா மன்ரல் ஷர்மா மகளிர் பளுத்தூக்குதல் பயிற்சியாளராக உள்ளார்.
பயிற்சியாளரால்..
முதலில் பூமிகா துப்பாக்கி சுடுதல் பிரிவைதான் தேர்வு செய்துள்ளார். ஆனால் எழுச்சியூட்டும் ஒரு பயிற்சியாளரை பார்த்தப்பின் அவர் தனக்கான பாதையாக பாடி பில்டர் பிரிவை தேர்வு செய்துள்ளார்.
ஒத்துக்கொள்ளாத பெற்றோர்
முதலில் அவரது பெற்றோர் பாடி பில்டர் ஆவதற்கு ஒத்துக்கொள்ளவில்லையாம். பெரும் பாடுபட்டு அவர்களை சம்மதிக்க வைத்து பாடி பில்டிங்குள் நுழைந்தாராம்.
7 மணி நேரம் பயிற்சி
தனது கோச் பூபேந்திர ஷர்மாவின் அறிவுரைப்படி ஒரு நாளைக்கு 7 மணி நேரம் பாடி பில்டிங்க்காக பயிற்சி செய்வாராம் பூமிகா ஷர்மா. நடந்து முடிந்த உலக பாடி பில்டருக்கான அனைத்துப் பிரிவுகளிலும் அதிக புள்ளிகளை பெற்று பூமிகா ஷர்மா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
பிரபஞ்ச பாடிபில்டர் போட்டி
தற்போது உலக பாடி பில்டருக்கான பட்டத்தை கைப்பற்றியுள்ள பூமிகாவுக்கு 21 வயது தான் ஆகிறது. இவர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பாடிபில்டருக்கான பிரபஞ்ச அழகிப் போட்டியில் பங்கேற்கவுள்ளார்.