லண்டன்: லண்டனில் ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் தங்கியிருக்கும் அறைக்கு மேலும் 5 பெண்கள் சென்று கும்மாளம் போட்டுள்ளனர்.
ரியோடிஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் முடிந்த கையோடு ஜமைக்காவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் ஓய்வு எடுக்க லண்டனுக்கு சென்றுள்ளார்.
லண்டனில் இரவு நேர கிளப் ஒன்றில் ஆட்டம் போட்ட போல்ட் தான் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்கு 10 பெண்களை அழைத்துச் சென்று கும்மாளம் போட்டார். இநநிலையில் நேற்று இரவு மீண்டும் 5 அழகிகளை தனது ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மேலும் நைட்கிளப் ஒன்றில் இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகி ஒருவருடன் போல்ட் ஓவர் நெருக்கமாக இருந்துள்ளார். அவர்கள் நெருக்கமாக நடனமாடியதை பார்த்தவர்கள் இதையடுத்து 'அது' தான் என்று நினைக்கும் அளவுக்கு இருந்துள்ளது.
கடந்த சனிக்கிழமையில் இருந்து ஒரே பார்ட்டியும், கும்மாளமுமாக தான் உள்ளார் போல்ட் என்பது குறிப்பிடத்தக்கது.