For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலான்பாதர் கோப்பை: குத்துச்சண்டையில் தங்கம் வென்ற இந்தியாவின் அன்குஷ் தஹியா

உலான்பாதர் கோப்பையில் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த அன்குஷ் தஹியா தங்கம் வென்றார்.

By Lakshmi Priya

உலான்பாதர்: மங்கோலியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த அன்குஷ் தஹியா தங்கம் வென்றார்.

மங்கோலிய தலைநகர் உலான்பாதரில் சர்வதேச குத்துச் சண்டை போட்டி நடைபெறுகிறது. இங்கு ஆசிய நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் இந்தியா சார்பில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 10 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

Boxer Ankush Dahiya wins Gold in Ulaanbaatar Cup

60 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் கொரியாவின் சோய் சோல்-ஐ வீழ்த்தி இந்திய வீரர் அன்குஷ் தஹியா தங்கப்பதக்கம் வென்றார். 19 வயதானவர் அன்குஷ்.

இது அன்குஷின் இரண்டாவது சர்வதேச போட்டியாகும். காமன்மெல்த் போட்டிகளில் வெள்ளி பதக்கம் வென்ற தேவேந்திரோ சிங், மங்கோலியாவின் கண்டுலாம் முன்கன்- எர்டேனேவை தோற்கடித்தார்.

Story first published: Sunday, June 25, 2017, 16:47 [IST]
Other articles published on Jun 25, 2017
English summary
Young Indian boxer Ankush Dahiya won the gold medal in the 60 kg weight category at the Ulaanbaatar Cup in Mongolia on Sunday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X