கடைசி ஓவர் திரில்
கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஸ்ரீநாத் அரவிந்த் வீசிய பந்தில் இமாலய சிக்சர் விளாசியதுடன், வெற்றிக்கான சிங்கிள் ரன்னையும் தானே அடித்து தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றியை பறித்துக்கொடுத்தார் டுமினி.
இமாலய பார்ட்னர்ஷிப்
டுமினியும், பர்ஹான் பெகார்டியனும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் நாட்-அவுட் பார்ட்னர்ஷிப் அமைத்ததுதான் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது. இந்த ஆட்டத்துக்காக டுமினி மேன் ஆப் தி மேட்ச் விருதை தட்டிச் சென்றார்.
எதிர்பார்த்தோம்
நிருபர்களிடம் டுமினி கூறியது: இது ஒரு நீண்ட தொடர். அதன் முதல் ஆட்டத்திலேயே வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சியையும், தன்னம்பிக்கையும் அளித்துள்ளது. கடைசி ஓவரில் 10 ரன்களை ஒட்டி அடிக்க வேண்டிய தேவை இருந்தால் அதை எட்டிவிடலாம் என்று கணித்திருந்தோம்.
பவுலரின் கட்டுப்பாடு
கடைசி ஓவரில் அரவிந்த் ஒரு பந்தை கட்டுப்பாட்டை இழந்து ஃபுல்டாசாக வீசினார். அதை நான் சரியாக பயன்படுத்தி சிக்சருக்கு பறக்கவிட்டேன். இந்த சிறப்பான தொடக்கத்தை தென் ஆப்பிரிக்கா தொடர் முழுக்க கொண்டு செல்லும்.
சிறந்த ஆட்டம்
இப்போட்டியில் நான் ஆடியது கண்டிப்பாக எனது சிறந்த ஆட்டங்களில் ஒன்றாகும். தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஒப்பனிங் ஜோடி சிறப்பான ரன் குவிப்பை கொடுத்தது. அதையே பின்பற்றி மிடில் ஆர்டரிலும் சிறப்பாக விளையாடினோம். பர்ஹாடினும் சிறப்பான பங்களிப்பை செய்தார். இவ்வாறு டுமினி தெரிவித்தார்.