வெலிங்டன்: சமபலம் வாய்ந்த ஆப்கானிஸ்தானும், ஸ்காட்லாந்தும் நாளை மோத உள்ளன.
உலக கோப்பையின் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து நாளை டுனிடென் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் மோத உள்ளன.
ஆப்கானிஸ்தான் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளிடம் தோல்வியுற்றிருந்த நிலையில், ஸ்காட்லாந்து, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளிடம் தோற்றுள்ளது. இருப்பினும் ஸ்காட்லாந்து சிறப்பான ஆட்டத்தை அவ்விரு ஆட்டங்களிலும் வெளிப்படுத்தி எதிரணிகளுக்கு நெருக்கடி தந்திருந்தது.
இதேபோல கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் இலங்கைக்கு கடும் நெருக்கடியை தந்தது. மகிலா ஜெயவர்த்தனே சதத்தால் இலங்கை தப்பிப் பிழைத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்குமே இது முக்கியமான போட்டியாகும்.