அடுத்த 3 போட்டிகளும் முக்கியம்
இந்த வெற்றியோடு நாங்கள் தேங்கி விட மாட்டோம். அடுத்து 3 போட்டிகள் உள்ளன. அதில் கவனம் செலுத்துவோம். அந்தப் போட்டிகளும் முக்கியமானவை.
ஒவ்வொரு போட்டியும் புதுசு
ஒவ்வொரு போட்டியையும் புதிதாக பாவித்து அணுகுவோம். முதல் போட்டியில் என்ன நடந்திருந்தாலும் கவலைப்படாமல், அடுத்த போட்டி குறித்து திட்டமிடுவோம். அப்போதுதான் வெல்ல முடியும்.
வெள்ளை அடிப்போம்
ஒவ்வொரு போட்டியாக வென்று வருவோம். கடைசியில் 4-0 என்ற கணக்கில் தொடரை வெல்வதே எங்களது லட்சியம். வாய்ப்பிருந்தால் அதை சாதிப்போம். சோர்ந்து போயிருக்க விரும்ப மாட்டோம்.
அடுத்த போட்டியிலும் வென்றால்
அடுத்த போட்டியிலும் வென்றால் அதற்கடுத்த போட்டிகளை டிரா செய்ய முயற்சிப்போம் என்று யாரும் கருத வேண்டாம். தொடர்ந்து வெற்றியைக் குறி வைத்து ஆடுவோம். வெற்றி பெறுவது நல்ல விஷயம். அதை எட்ட முயற்சிப்போம்.
எங்க விளையாடினாலும் ஜெயிக்கனும்
டெஸ்ட் போட்டியில் வெல்வது நமக்குப் புதிதில்லை. அங்கு விளையாடும்போது ஜெயிக்கிறோம் என்றால் எங்கு விளையாடினாலும் ஜெயிக்க வேண்டும் என்றார் கோஹ்லி.
ஜமைக்காவில் அடுத்த போட்டி
இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜமைக்கால் அடுத்து ஜூலை 30ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்று தெரிகிறது.