ஆச்சரியமா இருக்கே
இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ரஹானே ஒரு வீரராகக் கூட இந்திய அணியில் நிலையாக இல்லாதவர். டோணியே கூட அவரது பேட்டிங் குறித்து சந்தேகம் தெரிவித்திருந்தார்.
புரியவில்லை
அப்படிப்பட்ட ரஹானே கேப்டன் என்ற செய்தி எனக்கு ஆச்சரியமாக இருந்தது. புரியாத புதிராக இருந்தது. தனது கடைசி ஒரு நாள் தொடரில் கூட (வங்கதேச டூர்) அவர் கடைசி இரு போட்டிகளிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.
கேப்டன் பதவி கேலிக்கூத்தாகி விட்டது
இந்திய கேப்டன் பதவி என்பது கேலிக்கூத்தாகி விட்டது. யார் வேண்டுமானாலும் கேப்டனாகலாம். அதன் முக்கியத்துவம் போய் விட்டது. எளிதாக இந்தப் பதவிக்கு வந்து விட முடிகிறது.
இருந்தாலும் சந்தோஷம்தான்
ரஹானே தனது கடைசி இரு ஒரு நாள் போட்டிகளில் அவரை நீக்கியதை நான் ரசிக்கவில்லை. என்ற போதிலும் வருகிற ஜிம்பாப்வே தொடரிலாவது அவர் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவார் என நம்பலாம்.
நல்லவர் வல்லவர்
ரஹானே அமைதியானவர். நிறைய அனுபவம் உடையவர். இப்போது அவரது திறமையை நீிரூபிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் என்றார் அகர்கர்.