மும்பை: டென்னிஸ் அணிகளில் ஆண்கள் பெண்கள் கலந்து பங்கேற்கும் வகையில் கலப்பு அணிகள், கிரிக்கெட்டிலும் உருவாக்கப்பட வேண்டும் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், " டென்னிஸ் போன்ற விளையாட்டுப் போட்டிகளில், கலப்பு வீரர்கள் பங்கேற்கும் போட்டிகளை நடத்துகின்றனர்.
அதேபோல, ஒரு நாட்டைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் இணைந்து, ஒரே கிரிக்கெட் அணியில், மற்றொரு நாட்டு அணியுடன் மோதினால் என்ன தவறு?.
ஒரு கிரிக்கெட் அணியில், 6 ஆண்கள், 6 பெண்கள், பங்கேற்று, விளையாடினால், சிறப்பாக இருக்கும். இதுபோன்ற நடைமுறை அமலுக்கு வந்தால், கிரிக்கெட் விளையாட்டுத் துறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்," என்று அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.