நடந்தது என்ன?
தலைமைப் பயிற்சியாளர் தேர்வு தொடர்பாக அனுராக் தாக்கூர் என்டிடிவிக்கு அளித்த பேட்டியின்போது கூறுகையில், பிசிசிஐயின் முதல் சாய்ஸ் ராகுல் டிராவிட்தான். அவரிடம் இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்றுமாறு நான் கேட்டேன்.
ஜூனியர் அணிக்கு வர விருப்பம்
அதை டிராவிட் நிராகரிக்கவில்லை. ஆனால் ஜூனியர் அணிக்குப் பயிற்சியாளராக இருப்பதாக கூறினார். அதுதான் டிராவிட். அவர் சீனியர் அணி பயிற்சியாளர், பணம் ஆகியவற்றைப் பார்க்கவில்லை. இளம் வீரர்களுக்குப் பயிற்சியாளராக இருக்கவே விரும்பினார் என்றார் தாக்கூர்.
யு 19 பயிற்சியாளர்
டிராவிட், இந்தியா ஏ அணி மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் அணியின் பயிற்சியாளராக இருந்தார். 19 வயதுக்குட்பட்டோர் அணி இந்த ஆண்டு தொடக்கத்தில் வங்கதேசத்தில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில் இறுதிப் போட்டி வரை வந்து, தோல்வியுற்றது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜூனியர் அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டார்.
டெல்லி அணியின் மென்டார்
43 வயதான டிராவிட், இந்த ஐபிஎல் சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் மென்டாராகப் பணியாற்றினார். அதற்கு முன்பு அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் இணைந்திருந்தார்.