மெல்பர்ன்: கிரிக்கெட் வாரியத்துடனான மோதலையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் சுமார் 200 பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு கிடைக்கும் வருவாயை வீரர்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பாக வாரியம் மற்றும் வீரர்கள் தரப்பு இடையே பெரும் இழுபறி நீடிக்கிறது.
பேச்சுவார்த்தையில் முதல்படியைகூட தாண்டமுடியவில்லை. எனவே மோதல் தொடர்ந்தால், கிரிக்கெட் வீரர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படமாட்டாது என்று தெரிகிறது.