மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று அசத்திய இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது.
வீரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50 லட்சமும், தலைமை பயிற்சியாளருக்கு (அனில் கும்ப்ளே) ரூ.25 லட்சமும், உதவி பணியாளர்களுக்கு தலா ரூ.15 லட்சமும் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்லது.
இந்திய அணி தற்போது டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய டெஸ்ட் அணி ஐசிசி தர வரிசையில் முதலிடத்தில் உள்ளது. அணியின் எழுச்சியை பாராட்டும் விதமாக இந்த ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.