டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியம் மினி ஐபிஎல் தொடரை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. வருகிற செப்டம்பர் மாதத்தில் இந்தத் தொடர் நடத்தப்படும். 2 வார காலம் நடைபெறும் இந்தத் தொடர் வெளிநாட்டில் நடத்தப்படுமாம்.
போட்டி நடைபெறும் தேதி, நடைபெறும் நாடு உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இந்த வருடம் முதல் இந்த மினி ஐபிஎல் தொடர் நடத்தப்படுமாம்.
இந்த மினி ஐபிஎல் தொடரில், வழக்கமான 8 அணிகளும் பங்கேற்கும். இந்தப் போட்டித் தொடர் அனேகமாக அமெரிக்கா அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் எனத் தெரிகிறது.
ஐபிஎல்லை மேலும் விரிவாக்கும் வகையில் வெளிநாட்டுக்கு இப்போட்டித் தொடரை கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். வழக்கமாக செப்டம்பர் மாதத்தில் இந்திய கிரி்க்கெட் வாரியம், சாம்பியன்ஸ் லீக் தொடரை நடத்தும். தற்போது அந்தத் தொடர் கைவிடப்பட்டு விட்டதால், அந்த இடத்திற்கு மினி ஐபிஎல் வருகிறது.