கரீபியன் பிரிமியர் லீக்
4-வது கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 29-ந் தேதி தொடங்கிய கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடர் ஆக., 7-ந் தேதி நிறைவு பெறுகிறது.
மேற்கு இந்தியத் தீவுகள்
போட்டிகள் டிரினிடாட் டொபாகோ, செயின் கிட்ஸ் அன்ட் நெவிஸ், கயானா, பார்படாஸ், ஜமைக்கா, செயின்ட் லூசியா மற்றும் அமெரிக்கா ஆகிய 7 நாடுகளில் நடத்தப்படுகிறது.
அமெரிக்காவிலும்
இதில் அமெரிக்காவில் முதல் முறையாக கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகள் நடத்தப்படுகிறது. அங்குள்ள புளோரிடா மாகாணத்தில் 6 போட்டிகள் நடைபெறவுள்ளன. அமெரிக்காவில் ஜூலை 26-ம் தேதி முதல் ஜூலை 31-ந் தேதி போட்டிகள் வரை நடைபெறவுள்ளது.
பெரும் கூட்டம்
இது தொடர்பாக தகவல் தொடர்பு இயக்குனர் பீட்டர் ப்ரென் கூறியதாவது: கடந்த ஆண்டு ஸ்டேடியத்திற்கு பார்வையாளர்களாக வந்தோர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்திருக்கிறது. அதேபோல உலகம் முழுவதும் தொலைக்காட்சியின் மூலம் 9 கோடி பேர் கரீபியன் பிரிமியர் லீக் தொடரை பேர் கண்டு களித்துள்ளனர்.
மார்க்கெட்டைப் பிடிக்கும் வகையில்
இந்நிலையில், அமெரிக்காவில் கிரிக்கெட் பார்வையாளர்களை அதிகப்படுத்தவும், கிரிக்கெட்டுக்கான சந்தையை அதிகரிக்கவும் கரீபியன் லீக் கிரிக்கெட் தொடரின் சில போட்டிகளை அங்கு நடத்த திட்டமிடப்பட்டது.