பிரிவு
இந்நிலையில், அனுஷ்கா மற்றும் கோஹ்லி நடுவே தனிப்பட்ட காரணங்களுக்காக பிரிவு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக இருவரையும் ஒன்றாக பார்க்க முடிவதில்லை.
மெசேஜ்
இருப்பினும், இந்திய அணி வெற்றி பெரும் தருணங்களில், கோஹ்லிக்கு வாழ்த்து சொல்லி செல்போன் மெசேஜ் அனுப்புவதை அனுஷ்கா வாடிக்கையாக வைத்திருப்பதாக கிசுகிசு உலவுகிறது.
கேலி, கிண்டல்
இந்நிலையில், டி20 உலக கோப்பையில் கோஹ்லி சிறப்பாக ஆடிவரும் நிலையில், மீண்டும் அனுஷ்கா பெயரை ரசிகர்கள் கையில் எடுத்து ட்ரோல் செய்து வருகிறார்கள்.
மீம்ஸ்கள்
நன்றி அனுஷ்கா, எங்கள் கோஹ்லியை எங்களிடமே திருப்பி கொடுத்துவிட்டீர்கள்.. என்பது போன்ற மீம்ஸ்களை உருவாக்கி சோஷியல் மீடியாக்களில் உலவ விட்டுள்ளனர்.
ஆக்ரோஷம்
இதுகுறித்து கோஹ்லி கவனத்திற்கு எப்படியோ தகவல் போயுள்ளது. இன்று மதியம் கோஹ்லி வெளியிட்ட டிவிட்டில், தனது ஆக்ரோஷத்தை காட்டியுள்ளார்.
|
இரக்கமில்லையா உங்களுக்கு
அனுஷ்கா ஷர்மாவை, நிறுத்தாமல் ட்ரோல் செய்வோரை பார்த்து வெட்கப்படுகிறேன். கொஞ்சமாவது இரக்க சுபாவத்தை கொண்டிருங்கள். அனுஷ்கா எப்போதுமே எனக்கு நேர்மறையைத்தான் தந்துள்ளார். இவ்வாறு கோஹ்லி டிவிட் செய்துள்ளார்.
ஊடல் முடிந்தது
இந்த டிவிட்டில் அனுஷ்காவின் டிவிட்டர் ஹேண்டிலையும் டேக் செய்துள்ளார், கோஹ்லி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி பற்றி கூட டிவிட் செய்யாத கோஹ்லி, காதலிக்காக வரிந்து கட்டியுள்ளதை பார்க்கும்போது, காதலர்களின் ஊடல் முடிந்து, கூடல் காலம் ஆரம்பித்து விட்டது போலும் என்றே சொல்ல தோன்றுகிறது.