மும்பை: இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. டாசில் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த இங்கிலாந்து, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்தது.
மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது. ஒரு ஆட்டம் சமனில் முடிந்துள்ளது. இந்நிலையில் 4வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.
ஆட்ட நேர இறுதியில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இப்போட்டியில் முதல்முறையாக டெஸ்ட் அரங்கில் கால் வைத்த ஓப்பனிங் பேட்ஸ்மேன், கீடன் ஜென்னிங்ஸ் 112 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மொயீன் அலி 50 ரன், கேப்டன் குக் 46 ரன்கள் எடுத்தனர்.
இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டையும் எடுத்திருந்தனர். 2வது நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.
இந்திய அணி விவரம்: விராட் கோஹ்லி, முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, கருண் நாயர், அஸ்வின், பார்திவ் பட்டேல், ஜடேஜா, ஜெயந்த் யாதவ், புவனஏஷ்வர் குமார், உமேஷ் யாதவ்.
இங்கிலாந்து அணி விவரம்: குக், கீடன் ஜென்னிங்ஸ், ரூட், மொயின் அலி, ஸ்ட்ரோக்ஸ், பெய்ர்ஸ்டோ, பட்லர், வோக்ஸ், ரஷித், ஆன்டர்சன், பேல்.