மெல்போர்ன்: உலக கோப்பை ஆட்ட நாயகன் விருது ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் பால்க்னர் மற்றும் தொடர் நாயகன் விருது அந்த நாட்டின் மிட்சேல் ஸ்டார்க் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
35 ஓவர்களில் 150 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்திருந்த நியூசிலாந்தை அடுத்த ஓவரிலேயே நிலை குலைத்தவர் பால்க்னர். அவரது அந்த ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகள் சாய்க்கப்பட்டன. அதுதா்ன் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. அப்போதிருந்தே ஆஸ்திரேலிய ஆதிக்கம் தொடங்கிவிட்டது. போட்டி முடியும் வரை நியூசிலாந்தால் மீளமுடியவி்ல்லை. எனவே பால்க்னருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
மேலும், இந்த தொடரில் 22 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க்கிற்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இவ்விரு விருதுகளையுமே இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் வழங்கினார். நியூசிலாந்தின் டிரெண்ட் பவுல்ட்டும் 22 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.