15 வருடத்திற்குப் பிறகு
கிட்டத்தட்ட 15 வருடத்திற்குப் பிறகு மும்பையைச் சேர்ந்த ஒரு வீரர் இந்திய அணியின் கேப்டனாகியுள்ளார். 27 வயதாகும் ரஹானே, சச்சினுக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டனாகியுள்ள மும்பை வீரர் ஆவார்.
2000மாவது ஆண்டோடு சரி
கடைசியாக 2000மாவது ஆண்டில் சச்சின் டெண்டுல்கர் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். ஆனால் அதில் அவருக்கு சந்தோஷம் கிடைக்கவில்லை. அதன் பின்னர் மும்பையிலிருந்து யாருமே கேப்டனாகியதில்லை.
சந்தோஷம் அஜிங்கியா
ரஹானே தேர்வு குறித்து சச்சின் கருத்து தெரிவிக்கையில், நான் அஜிங்கியாவுக்காக மகிழ்ச்சி அடைகிறேன். அருமையான வீரர். சீரியஸாக செயல்படுபவர். சின்சியராக உழைப்பவர். கடுமையான உழைப்பாளி, போராளி.
கமிட்டாகிட்டா
தனது கமிட்மெண்ட்டால் என்னைப் பலமுறை கவர்ந்துள்ளார். அர்ப்பணிப்புடன் ஆடும் வீரரும் ஆவார். கேப்டனாக அவர் சிறப்பாக செயல்படுவார் என திடமாக நம்புகிறேன். ஆல் தி பெஸ்ட் என்று கூறியுள்ளார் சச்சின்.
என்ன கொடுமைன்னா...!
ஜிம்பாப்வே தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாகியிருக்கும் ரஹானே, சமீபத்தில் முடிவடைந்த வங்கதேச தொடரின்போது கடைசி 2 ஒரு நாள் போட்டிகளிலும் சேர்க்கப்படாமல் நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
காரணம் என்ன?
ரஹானே நீக்கம் குறித்து கேப்டன் டோணி விளக்கம் தருகையில், ரஹானே ஸ்லோ பிட்ச்சுகளில் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்வதில் ரஹானே திணறுகிறார் என்பதுதான்.
பார்க்கலாம், ஜிம்பாப்வே டூரில் சரியாக ரொட்டேட் செய்கிறாரா அல்லது லூசில் விடுகிறாரா என்று!