கேட்ச்
கோஹ்லி 31 ரன்கள் எடுத்த நிலையில் ஒரு பந்தை ஓங்கி அடிக்க அதை கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் கம்பீர் கேட்ச் பிடிக்க முயன்று மிஸ் செய்துவிட்டார். அவர் கையில் இருந்து தவறிய பந்தால் கோஹ்லி மகிழ்ச்சியுடன் ஆடினார்.
கம்பீர்
கோஹ்லி கேட்ச்சை மிஸ் பண்ணியதை என்னால் மறக்கவே முடியவில்லை. நான் கேட்ச்சை விட்டதற்காக என் அணி வீரர்கள் என்னை வில்லன் போன்று பார்க்க மாட்டார்கள். இருப்பினும் என்னால் அதை மறந்துவிட்டு மறுவேலையை செய்ய முடியவில்லை என்கிறார் கம்பீர்.
கோஹ்லி
அந்த கேட்ச்சை மட்டும் நான் பிடித்திருந்தால் மேட்ச்சே மாறிப் போயிருக்கும். கேட்ச்சை மிஸ் பண்ணியது சிவப்பு கம்பளத்தில் நடக்கையில் உடை நழுவி சங்கடம் ஏற்படுத்துவது போன்று உள்ளது என கம்பீர் தெரிவித்துள்ளார்.
முடியவில்லை
கிரிக்கெட் வீரர் வாழ்வில் இது எல்லாம் சகஜம் தான். இருப்பினும் என்ன செய்ய. திங்கட்கிழமை இரவில் இருந்து கண்ணை மூடினாலே அது தான் நினைவுக்கு வருகிறது என்று புலம்பித் தள்ளுகிறார் கம்பீர்.